தமன்னா, சமந்தா போட்டோக்களை பயன்படுத்தி நடந்த மோசடி.. வெளிவந்த ஷாக்கிங் தகவல்
திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் சமந்தா மற்றும் தமன்னா. இவர்கள் இருவருடைய பெயர் மற்றும் போட்டோக்களை பயன்படுத்தி நடந்த மோசடி குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்குகானாவின் ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
அந்த வாக்காளர்கள் பட்டியலில் நடிகைகள் சமந்தா, தமன்னா, ராகுல் ப்ரீத் சிங் போன்றவர்கள் பெயர் போலியாக சேர்க்கப்பட்டுள்ளதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களது பெயர், போட்டோவுடன் போலியாக பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதனால் மோசடி நடந்திருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. சமந்தா, தமன்னா ஆகியோரின் வாக்காளர் லிஸ்ட் போட்டோ தற்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.