12 கோடி நஷ்டஈடு கேட்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. DNA பரிசோதனைக்கு தயாராகும் ஜாய் கிரிசில்டா

12 கோடி நஷ்டஈடு கேட்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. DNA பரிசோதனைக்கு தயாராகும் ஜாய் கிரிசில்டா

தன்னை பற்றி அவதூறு பரப்பிய ஜாய் கிரிசில்டாவிடம் மாதம்பட்டி ரங்கராஜ் 12 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக வழக்கறிஞர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பேசியிருக்கிறார்.

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.

தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.

சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

12 கோடி நஷ்டஈடு கேட்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. DNA பரிசோதனைக்கு தயாராகும் ஜாய் கிரிசில்டா | Madhampatty Rangaraj Joy Crizildaa Baby Dna Test

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில் திருமண மோசடி புகார் தொடர்பான விசாரணை முதல் மனைவியுடன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்திற்கு வந்திருந்தார்.

அப்போது இருதரப்பு விசாரணை நடைபெற்றது என்பதால் நிறைமாதக்கர்ப்பிணியான ஜாய் கிரிசில்டாவும் வருகை தந்திருந்தனர்.

12 கோடி நஷ்டஈடு கேட்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. DNA பரிசோதனைக்கு தயாராகும் ஜாய் கிரிசில்டா | Madhampatty Rangaraj Joy Crizildaa Baby Dna Test

இது குறித்து பேசிய பெண வழக்கறிஞர் ஒருவர், “ ஜாய் கிரிசில்டா ஏமாற்றப்பட்டிருக்கிறார். அதனை நிருபிப்பதற்காக அவர் DNA பரிசோதனை கூட எடுத்துக் கொள்ள தயாராக உள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை பற்றி அவதூறாக ஜாய் கிரிசில்டா பேசுகிறார் எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் 12 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டிருக்கிறார். அதற்கு ஜாய் கிரிசில்டா தரப்பு தரமான பதிலடிக் கொடுத்து வழக்கை தள்ளுபடி செய்ய வைத்தது..” என இந்த விவாகரம் பற்றிய முழு விளக்கத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது. 

இது போன்று வேறு என்னென்ன விடயங்கள் பேசியிருக்கிறார் என்பதை காணொளியில் பார்க்கலாம்.

LATEST News

Trending News