எங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை..அவங்களுக்கு தான் பாதிப்பு!! கேரளா ஸ்டோரி 2 பட தயாரிப்பாளர்..
கேரளா ஸ்டோரி 2 படம் கேரளாவை தாண்டி இந்தியளவில் நடைபெறும் மதமாற்றத்தை அம்பலப்படுத்துவதாக பல விமர்சனங்கள், கண்டனங்கள் எழுந்து வருகிறது. தற்போது வரை இப்படத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று கேரளா ஸ்டோரி 2 படத்தின் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் தெரிவித்துள்ளார்.

அதில். நாங்கள் கேரளாவுக்கு பின்னால் செல்லவில்லை. கேரளா கடவுளின் தேசம், கேரளாவில் நிலவி வரும் தீங்கை முடிந்தளவிற்கு விரைவாக அகற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கேரளா ஸ்டோரி முதல் பாகம் வெளியான பின் அதுதொடர்பாக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
கேரளா ஸ்டோரி 2 படத்தில் கேரளாவை தாண்டி இந்தியளவில் நடைபெறும் மதமாற்றத்தை அம்பலப்படுத்துகிறது. தற்போது இப்படத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, நீங்கள் உண்மையை சொல்லும்போது, அது உங்களுக்கு அந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

காரணம் உண்மையை சொல்லும் ஒருவரை மிரட்டினால், அது தங்களுக்குத்தான் பாதிப்பு என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்று பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.