தாய்கிழவி புயலில் தடம் தெரியாமல் போன தெறி...இப்படியாகிருச்சே
ராதிகா நடிப்பில் பிரமாண்ட எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் தாய்கிழவி. அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றது போலவே இருக்க படமும் ரிலிஸ் செய்த அனைத்து இடங்களிலும் செம ஓட்டம் ஓடுகிறது.
சுமார் 15 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டுமே தாய்கிழவி வசூல் செய்துள்ளது. இப்படியிருக்க தாய்கிழவி படத்துடன் வந்த தெறி படம் தற்போது வரை வெறும் 1.4 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் ரீரிலிஸ் படங்களில் மிக மோசமான வசூலை சந்தித்தது தெறி படம் தான் என கூறப்படுகின்றது. மேலும், ரீரிலிஸ் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது இது ஒரு உதாரணம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதே நேரத்தில் ஏ எம் ரத்னம் அஜித்தின் என்னை அறிந்தால், ஆரம்பம், வேதாளம் ஆகிய படங்களை ரீரிலிஸ் செய்யவும் முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.